Friday, September 7, 2012

கணனியின் செயற்பாடுக​ளை கண்காணிப்ப​தற்கு

கணனிகளைப் பயன்படுத்தும் போது மேற்கொள்ளப்படும் குளறுபடிகள், தவறான பாவனைகள் போன்றவற்றை மிகவும் எளிதான முறையில் கண்காணிப்பதற்கு Super Silent Manager எனும் மென்பொருள் பயன்படுகின்றது.
இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டும் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.
இதன் மூலம் குழந்தைகள் கணனிகளைப் பாவிக்கும் போதோ அல்லது ஊழியர்களின் கணனிப் பாவனையையோ அல்லது ஏனைய குடும்ப உறுப்பினர்களின் செயற்பாடுகளையோ துல்லியமாக கண்காணிக்க முடியும்.
தவிர இம்மென்பொருளின் உதவியுடன் வெப் கமெரா மூலம் பயணம் செய்கையிலோ அல்லது அலுவலகத்திலிருந்தவாறோ கண்காணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment